முகப்பு
தினமணி கதிர்

சிரி... சிரி... 

""பிரசாரம் முடியிற சமயத்துல போய் தலைவருக்கு மாலை போடறாங்களே?''"" மாலையோடு பிரசாரத்தை  முடிக்கணும்னு கோர்ட் உத்தரவாம்''

தினமணி கதிர்

சிரி... சிரி... 

""பிரசாரம் முடியிற சமயத்துல போய் தலைவருக்கு மாலை போடறாங்களே?''"" மாலையோடு பிரசாரத்தை  முடிக்கணும்னு கோர்ட் உத்தரவாம்''

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

""தெருவுல முதல் வீடா இருந்தா இந்தத் தொல்லை தான்!''
""என்ன விஷயம்?''
""வர்ற பிச்சைக்காரன்ககிட்ட அடுத்த வீடு பாருன்னு சொன்னா, முதல் பிச்சை சாமின்னு சென்டிமெண்ட் போடறானுங்களே''

""பிரசாரம் முடியிற சமயத்துல போய் தலைவருக்கு மாலை போடறாங்களே?''
"" மாலையோடு பிரசாரத்தை
 முடிக்கணும்னு கோர்ட் உத்தரவாம்''

""எனக்கு கடன் கொடுத்த விஷயத்தை தயவுசெய்து என் மனைவி கிட்ட மட்டும் சொல்லிடாதீங்க சார்''
""ஏன்... கடன் வாங்கினா திட்டுவாங்களா?''
""இல்ல சார்... பிறகு எப்ப பணம் தேவைப்பட்டாலும் உங்ககிட்ட அனுப்பி  வாங்கிட்டு வரச்சொல்லுவா சார்''


""நீங்க ஆசை ஆசையா பல நாள் வளர்த்த தாடியை , பையனை ஸ்கூல்ல சேர்த்ததும் 
எடுத்துட்டீங்களே... ஏன் சார் ?''
""அவன், "டாடி... டாடி' ன்னு கூப்பிடறது , "தாடி... தாடி' ன்னு கூப்பிடற மாதிரி இருக்கே''

முழு கட்டுரையைப் படிக்க →