சிரி...சிரி...
"வேலைக்காரி என்ன உன்னை "தங்கச்சி',ன்னு கூப்பிடறா...?''""நான் தான் "அக்கா'ன்னு கூப்பிடக்கூடாதுன்னு கண்டிச்சிருக்கேன்!''
" "வேலைக்காரி என்ன உன்னை "தங்கச்சி',ன்னு கூப்பிடறா...?''
""நான் தான் "அக்கா'ன்னு கூப்பிடக்கூடாதுன்னு கண்டிச்சிருக்கேன்!''
-வி. ரேவதி, தஞ்சை.
காவலர்: ""இப்ப கைது பண்ணச் சொல்லி நீயே வந்திட்டியே..''
ரௌடி: ""என்ன காட்டி கொடுக்கற வங்களுக்கு பத்து லட்சம் பரிசுன்னு'' நோட்டீஸ் பாத்தேன். அதான் நானே வாங்க வந்துட்டேன்...''
- ப. நரசிம்மன், திருச்சி.
""என் மனைவி ஆபிசிஸ்ல திட்ட அதிகாரியாக வேலை பார்க்கிறார்''
""சரி.. அதற்கென்ன..?''
""வீட்டிலும் திட்டிக் கொண்டே இருக்கிறார்''
-டி.கே.சிவக்குமார், கோவை.
""ஆபரேஷனுக்கு செலவாகும் பராவாயில்லையா?''
""பரவாயில்லை. டாக்டர்... "கடன்' தானே சொல்லிட்டு போகப் போறேன்?
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
""நான் ஆறு வயசுல தைச்ச சட்டையை இப்ப போட்டுனு இருக்கேன்''
""ஆச்சரியமா இருக்குதே எப்படி ?''
:அப்ப சட்டையை ரொம்ப லூசா தைச்சுட்டாங்க !''
-தீபிகா சாரதி .சென்னை -5.
""இப்போ ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பிச்சை எடுக்க வர்றியே ஏன்? ''
"" கடவுள் புண்ணியத்தில் புதுசா ஒரு பிரிட்ஜ் வாங்கிட்டேன் தாயீ!''
-நாஞ்சில் சு. நாகராஜன் , பறக்கை.