முகப்பு
தினமணி கதிர்

எழுதிக் கொண்டிருக்கிறேன்!

தினமணி கதிர்

எழுதிக் கொண்டிருக்கிறேன்!

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

டாக்டர்  ஷிவாகோ  மூலம் உலகப் புகழ் பெற்ற ரஷ்ய  எழுத்தாளர்  போரிஸ் பாஸ்டர்நாக்- ஐ   ஞாயிற்றுக்கிழமைகளில்  மட்டும்தான்  சந்திக்க  முடியும்.

மாஸ்கோவிலிருந்து 30.கி.மீ. தூரத்தில்  தனியாக  வசித்து வந்த இவரைக் காண  வெளிநாடுகளில் இருந்தெல்லாம்  ரசிகர்கள் வருவார்கள். மிகக் கஷ்டப்பட்டு  அவர் இருக்கும்  இடத்தை விசாரித்துக் கொண்டு அங்கே  போனால்  வாசலில்  இப்படியோர் அறிவிப்பு  காணப்படும்.


'நான் இப்போது  எழுதிக் கொண்டிருக்கிறேன்.  யாரையும்  சந்திக்க முடியாது.  தயவு செய்து  போய்விடுங்கள்'

இதைப் படிப்பவர்களுக்கு எப்படி  இருக்கும்?  முன்கூட்டியே  இவரைச் சந்திப்பதற்காக  அப்பாயின்ட்மெண்ட் வாங்குவது  என்பதும்  முடியாத  காரியமாம்.
 (அறிஞர்கள்  வாழ்வில்  நிகழ்ந்த  சுவையான  சம்பவங்கள் 300 என்னும்  நூலிலிருந்து)
- எல்.நஞ்சன்
 

முழு கட்டுரையைப் படிக்க →