தம் கையெழுத்தை விரும்பும் அன்பர்களுக்கு...
தினமணி கதிர்தம் கையெழுத்தை விரும்பும் அன்பர்களுக்கு...
உலகில் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டபோது, தம் கையெழுத்தை விரும்பும் அன்பர்களுக்கு-
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்று முதலில் தமிழில் எழுதி
Every country is my country
Every man is relation
என்று ஆங்கிலத்தில் எழுதி, புறநூனூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனார் கருத்தைப் பரப்பி, தமிழர்களின் பண்பாட்டை உலகிற்கு எடுத்துரைத்தார் தனிநாயகம் அடிகளார்.
அதுமட்டுமா ? அடிகளாருக்குத் தெரிந்த மொழிகள் அத்தனையிலும், அவரவர்க்கு, அவரவர் தாய்மொழியில் எழுதிக் கொடுத்தார். எம்மொழியில் எழுதினாலும் தமிழில் முதலில் எழுதி, பிறகு அவரவர் தாய்மொழியில் எழுதுவார்.
- முக்கிமலை நஞ்சன்