""உனக்கு காது கேட்க மாட்டேங்குது!''
""என்ன பண்றது வயசானாலே கால் வலி வரத்தானே செய்யும்!''
""கழுத்து வலின்னா போய் டாக்டரைப் பார்க்க வேண்டியது தானே!''
- நா.இரவீந்திரன்,
வாவிபாளையம்.
""பல் வலிக்கு எதுக்கு கால்நடை டாக்டரிடம் வந்தே..?''
""வலிப்பது சிங்கப் பல் ஆச்சே!''
-எம்.எஸ்.மயில்,
திருநெல்வேலி.
""உங்க ஊரில் பெரிய மேதைகள் யாரும் பிறந்திருக்காங்களா..?''
""ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் யாரும் பிறக்கலை..
எல்லோருமே குழந்தைகளாகவே பிறந்தாங்க..!''
-ஜி.சுந்தரராஜன்,
திருத்தங்கல்.
""அந்தக் காலத்துல நான் பத்து கிலோ மீட்டர் நடந்தே போய் படித்தேன்டா பேராண்டி..''
""அப்பவே உனக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா தாத்தா?''
-கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்.
""விடை தெரிஞ்சும் ஏன்டா சொல்லலே..?''
""நான் எதையும் தெரிஞ்ச மாதிரி காமிச்சிக்க மாட்டேன் டீச்சர்..!''
-ஏ.மூர்த்தி,
திருவள்ளூர்.
""கடையில வாங்கின சர்க்கரை எடை ரொம்ப குறைவா இருக்கேடா!''
""வண்டியில கடைக்குப் போறேன்னா கேட்டீங்களா... நடந்தா சர்க்கரை குறையுமுன்னு கடைக்காரர் ஒருத்தர்கிட்டே பேசிக்கிட்டிருந்தார்மா?''
-கே.ஆர்.ஜெயக்கண்ணன்,
கவற்குளம்தேரிவிளை.