FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

ஒரு ரூபாய் நூல்

பிரேமா நந்தகுமார் குறிப்பிடும் அந்த ஒன்றரை ரூபாய் பாரதியார் கவிதைகளுக்குப் பின் ஒரு செய்தி உண்டு.

Updated On : 4 ஜனவரி 2026, 5:16 pm IST
பகிர்:

பிரேமா நந்தகுமார் குறிப்பிடும் அந்த ஒன்றரை ரூபாய் பாரதியார் கவிதைகளுக்குப் பின் ஒரு செய்தி உண்டு. 1954-ஆம் ஆண்டு பாரதியின் பாடல்கள் அனைத்தையும் அன்றைய தமிழக அரசு 'பாரதி நூல்கள் -கவிதை' என்று ஒரு தொகுப்பு வெளியிட்டது. அதன் விலை ஏழரை ரூபாய். அது விலை அதிகம் என்று நினைத்த சக்தி பதிப்பகம் வை.கோவிந்தன் காமராஜரை சந்தித்தார். 'வாய்யா, ரெட்!' என்று அவரை காமராஜர் வரவேற்றார்.

காமராஜர் அவரை எப்போதும் அப்படித்தான் அழைப்பார். காரணம், கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை முதலில் பதிப்பித்தவர் வை.கோ. அந்த நூலுக்கு சிவப்பு வண்ணக் கதர் துணியினால் அட்டை போட்டிருந்தார்.

'பிரிட்டனில் அவர்களது சிறப்பு வாய்ந்த நூல்களை ஒரு ஷில்லிங் விலைக்குக் கொடுக்கிறார்கள். இதோ பாருங்கள் பேர்ள் பெக்கின் குட் எர்த்தை குறைந்த விலைக்கு வெளியிட்டிருக்கிறார்கள். நீங்கள் பாரதி பாடல்களுக்கு ஏழரை ரூபாய் வைத்திருக்கிறீர்கள்.

Advertisement

Advertisement

குறைந்த விலையில் கொடுத்தால் பலரும் வாங்குவார்கள். அவரது கவிதைகள் பரவலாகச் சென்றடையும்' என்றார் வை.கோ.

'நீங்களே அதைச் செய்யலாமே' என்றார் காமராஜர்.

அதை சவாலாக எடுத்துக் கொண்டு வை.கோ. தனது சக்தி காரியாலயம் மூலம் பாரதி கவிதைகளை வெளியிட்டு ஒரு ரூபாய் விலையில் கொடுத்தார். ஒரு மாதத்தில் அது 3000 பிரதிகள் விற்றது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments