மகாத்மா' என்றதும் காந்தியின் நினைவுதான் வரும். ஆனால், அவருக்கு முன்பே ஒரு பெண்ணுக்கு அந்த அடைமொழி வழங்கப்பட்டுவிட்டது. அது, சாவித்ரிபாய் புலே.
1831-இல் மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் பிறந்த இவர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண் விடுதலைக்காகவும், விதவை மறுமணத்திற்காகவும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது பணியைப் பாராட்டி மக்கள் இவருக்கு "மகாத்மா' என்ற பட்டம் சூட்டினர். காந்தி கூட, "உண்மையான மகாத்மா சாவித்ரிபாய் புலே தான்' என்று கூறியுள்ளார்.