சில சமயம் சிலர் சுவையான கேள்வி எழுப்புவது உண்டு. தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக இருந்த போது பள்ளிகளில் தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் கட்சிக்கும் அதற்கு ஏற்ப, பெயர் தெலுங்கு தேசம் என இருந்தது.
இன்றைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பதவி ஏற்றதும் தான் பல கிராமங்களுக்கு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த போது, அங்குள்ள மக்கள் தங்களால் ஆங்கிலம் படிக்க முடியாததால், வெளியிடங்களுக்குச் சென்று வேலை பார்க்க இயலவில்லை என்று கூறியதாகவும், அதனால் இனி பள்ளி கல்வியை, பிரைமரி முதல் ஆங்கிலத்திற்கு மாற்ற அறிவித்தார்.
இதை அறிந்த பிரபல விமர்சகர் "தி வீக்' சச்சிதானந்த் மூர்த்தி எழுப்பியுள்ள கேள்வி இது:-
தெலுங்கை ஆதரித்த சந்திரபாபு நாயுடுவின் கட்சி தெலுங்கு தேசம் என்றால் ஆங்கிலத்தை ஆதரிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியை ஆங்கில தேசம் என அழைக்கலாமா? எப்படி இருக்கு!