உடையைத் தேர்வு செய்வதில் இளைஞர்களும், இளம்பெண்களும் மிகவும் கவனமாக இருக்கின்றனர். தேர்வு செய்ய எவ்வளவு நேரமானாலும் கவலைப்படாமல் பல மணி நேரம் காத்திருந்து தேடித் தேடி தேர்வு செய்கின்றனர்.
புதிய வடிவமைப்பு, புதிய வண்ணம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கின்றனர். விலை என்னவாக இருந்தாலும் அதைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை.
புதிய வடிவமைப்புகளுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
புதிய வடிவமைப்பு செய்வதில், துணிகளில் பல வண்ணங்களில், பல வடிவமைப்புகளில் பிரிண்ட் செய்யும் தொழிலும் (Fabric painting) அடங்கியுள்ளது. இத்தொழிலில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வீட்டிலிருந்தே அத்ததொழிலை செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.
துணிகளில் பிரிண்ட் செய்ய கற்றுத் தரும் குறுகிய கால பயிற்சிகள் முக்கிய நகரங்களில் சில நிறுவனங்களால் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. சில நிறுவனங்கள் நிரந்தரமாக குறுகிய காலப் பயிற்சிகளை நடத்துகின்றன. இந்தப் பயிற்சியைப் பெற்றால், வீட்டிலிருந்தே அத்தொழிலைச் செய்யலாம்.
இப்பயிற்சி பெறுவது மிகவும் எளிதானது.
இப்பயிற்சியை வழங்கும் நிறுவனங்களில் சில :
1. மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, சென்னை.
2. தயால்பாக் எஜூகேஷனல் இன்ஸ்டியூட் (Deemed University),ஆக்ரா, உத்தரபிரதேசம். சென்னை, மதுரை, திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் அமைந்துள்ள இதன் தகவல் மையங்கள் மூலமாகவும் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
3. லலித் கலாஷேத்ரா, கோவை
4. பாரத் சேவக் சமாஜ் வோகேஷனல் எஜூகேஷன், மேற்கு தாம்பரம், சென்னை
5. அமிர்தா விஸ்வ வித்யா பீடம், அமிர்தா பல்கலைக் கழகம், கோவை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.