மகளிர்மணி

தயாரிப்பாளரின் வருத்தம்!

DIN

கே.3 சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் "திட்டிவாசல்.' நாசர், மகேந்திரன், ஈஷா அகர்வால், தனிஷ் ஷெட்டி, வினோத்குமார் நடிக்கின்றனர். கதை எழுதி இயக்குகிறார் பிரதாப் முரளி. வனப் பகுதிகளை பின்னணியாக கொண்டு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ் ராவ் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அவரிடம் பேசும் போது, "கன்னடம் மற்றும் தெலுங்கில் படங்கள் தயாரித்த அனுபவம் எனக்கு உண்டு. தமிழ்ப் படைப்புகள் மேல் எனக்கு மரியாதை உண்டு. நானும் ஒரு கதையை தேர்வு செய்து தயாரிப்பாளராக தமிழில் அறிமுகமானேன். முதலில் மேக்னா நாயுடுவை இதன் கதாநாயகியாக தேர்வு செய்தோம். கதை கேட்டு அவரும் ஒப்புக் கொண்டார். காடும் காடு சார்ந்ததுதான் இதன் கதை. இதனால் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ஹோட்டல்களில் மட்டுமே தங்க முடியும். ஆனால், மேக்னா நாயுடு நட்சத்திர ஹோட்டலில் மட்டும்தான் தங்குவேன் என பிரச்னை செய்தார். இதனால் படப்பிடிப்பு நின்று போனது. நிலைமையை விளக்கிய பின்பும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் எல்லாருக்கும் தெரிந்த நடிகையும் கிடையாது. இதனால் அவரை படத்தில் இருந்து வெளியேற்றி விட்டு படப்பிடிப்பை நடத்தினோம்'' என்றார் தயாரிப்பாளர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT