மகளிர்மணி

சமையல் டிப்ஸ்

முட்டையை வேக வைக்கும் போது  தண்ணீரில் ஒரு  தேக்கரண்டி  வினிகரை  விட்டால்,  முட்டையின் ஓடு வெடித்தாலும்  உள்ளே இருப்பவை வெளியில் வராது.    

தவநிதி


* முட்டையை வேக வைக்கும் போது  தண்ணீரில் ஒரு  தேக்கரண்டி  வினிகரை  விட்டால்,  முட்டையின் ஓடு வெடித்தாலும்  உள்ளே இருப்பவை வெளியில் வராது.    
* பால் புளிக்காமல் இருக்க,  பாலைக் காய்ச்சும்போது, ஒரு ஏலக்காயைச்  சேர்த்துக் காய்ச்சினால், நீண்ட நேரத்திற்கு பால் புளிக்காமல் இருக்கும். 
* தோல் உரித்த உருளைக்கிழங்குகள் கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரைத் தெளித்து ஃப்ரிட்ஜில்  வைக்கவும்.
* சமையல் மேடையில் படிந்திருக்கும்,  எண்ணெய் கறையை அழிப்பதற்கு, எலுமிச்சம் பழத்தை இரண்டு துண்டாக வெட்டி அதை உப்பில் வைத்துப்  பின்னர் அந்த துண்டுகளை வைத்து தேய்க்கவும்.
* கத்தரிக்காய்  விரைவில் வாடி வதங்கி விடாமல் இருக்க கத்தரிக்காயை ஹாட்  பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல், நிறம் மாறாமல் இருக்கும்.
* வடை, போண்டா பொரித்த எண்ணெய்ப் பின்னர்,  காறலாக இருக்கும்.  இதை போக்குவதற்கு  எண்ணெய்யில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்துவிடவும்.  இப்படி செய்தால் எண்ணெயின் காறல் குறைந்துவிடும்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரு சம்பவங்களில் பெண்களிடம் நகை பறிப்பு

சமூகத்தின் உடனடி தேவை உணவு விழிப்புணா்வு! - மருத்துவா் கு. சிவராமன்

தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏ மகன்

கொடைக்கானலில் கபடிப் போட்டி

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!

SCROLL FOR NEXT