"திரைப்படத் துறையில் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் தங்கள் புகாரை பதிவு செய்ய ஒரு மேடை கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. பெண்கள் மட்டுமல்ல, பெரும்பாலான ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களும் தங்கள் புகாரைப் பதிவு செய்ய இது சரியான தருணம். நாட்டின் பல பகுதியிலிருந்தும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் வெளிப்படையாகத் தெரிய வரும்போது, தகுந்த நடவடிக்கை எடுத்து வன்முறைகளைத் தடுப்பது அவசியம்'' என்கிறார் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே.