"மவுலி' என்ற மராத்தி படத்தை தயாரிப்பதன் மூலம் ஜெனிலியா தேஷ்முக் தயாரிப்பாளராகியுள்ளார். இவரது கணவரும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக், ஏற்கெனவே 2014- ஆம் ஆண்டு வெளியான "லேய் பாரி' என்ற மராத்தி படத்தில் நடித்துள்ளார். தற்போது இவரையே கதாநாயகனாக வைத்து "மவுலி' படத்தை தயாரிக்கும் ஜெனிலியா, இது எங்களுடைய பெருமைக்குரிய படைப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். முன்னாள் நடிகை உஷாகிரணின் பேத்தி சயாமிகேர், ரித்தேஷூடன் ஜோடியாக நடிக்கிறார்.