ஏழு வயதிலேயே பரத நாட்டியம் பயின்ற ரேவதி, 1979-ஆம் ஆண்டு அரங்கேற்றம் முடித்தவுடன், படங்களில் நடிக்கத் தொடங்கும் வரை பல மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் அவர் நாட்டியம் பயின்ற ஸ்ரீசரஸ்வதி கான நிலையத்தின் 80-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடந்தபோது, மேடை ஏறி "கிருஷ்ணா நீ பேகன பாரோ' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். "நடிகையான பின் நேரமின்மையால் நாட்டியம் ஆடுவதை விட்டுவிட்டேன். நீண்ட காலமாக பயிற்சியில்லாததால் சுலபமாக ஆடக்கூடிய வகையில் இந்த பாடலை தேர்ந்தெடுத்து ஆடினேன்'' என்று ரேவதி கூறியுள்ளார்.