இதயத்தை முதுகில் சுமக்கும் பெண்!
பையை முதுகில் வைத்து சுமந்து செல்வது சிறுவர் முதல் பெரியவர் வரை செய்வதுதான். பெட்டிக்குள் செயற்கை இதயத்தை வைத்து சதா சுமந்து கொண்டு இருப்பவர் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?
பையை முதுகில் வைத்து சுமந்து செல்வது சிறுவர் முதல் பெரியவர் வரை செய்வதுதான். பெட்டிக்குள் செயற்கை இதயத்தை வைத்து சதா சுமந்து கொண்டு இருப்பவர் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?
செல்வா ஹுசைன் 41 வயதுப் பெண்மணி. இங்கிலாந்தில் வாழ்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாய். இதயத்தில் ஏற்பட்ட கோளாறுகளை மருத்துவ ரீதியாகக் குணப்படுத்த முடியாமல், செயற்கை இதயத்தின் உதவியால் வாழ்ந்து வருகிறார்.
இதயம் செய்யும் வேலைகளைச் செய்யும் கருவிதான் செயற்கை இதயம் என்று அழைக்கப்படுகிறது. அந்த கருவியை ஒரு பெட்டியில் வைத்து சதா நேரமும் முதுகில் சுமக்கிறார் செல்வா ஹுசைன். செயற்கை இதயத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் இரண்டாவது நபர் இந்த செல்வா.
Advertisement
Advertisement
செல்வாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் சுவாசிக்க சிரமம் ஏற்பட்டதால், சிகிச்சை பெற மருத்துவமனைக்குச் செல்ல,.. அங்கு அவரது இதயம் பல கோளாறுகளைக் கொண்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகுதான் செல்வாவுக்கு செயற்கை இதயத்தின் உதவியால் உயிர் வாழலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இந்த செயற்கை இதயத்தின் இன்றைய விலை சுமார் ரூபாய் 86 லட்சம். செயற்கை இதயம் இருக்கும் பெட்டியின் எடை ஏழரை கிலோ.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.