முகப்பு
மகளிர்மணி

மருதாணியில்  இத்தனை நன்மைகளா? 

மருதாணி அழகிற்கானது மட்டுமல்ல, அது  ஏராளமான  மருத்துவ குணம் கொண்டது.

மகளிர்மணி

மருதாணியில்  இத்தனை நன்மைகளா? 

மருதாணி அழகிற்கானது மட்டுமல்ல, அது  ஏராளமான  மருத்துவ குணம் கொண்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

மருதாணி அழகிற்கானது மட்டுமல்ல, அது  ஏராளமான  மருத்துவ குணம் கொண்டது.  இதையறிந்துதான்  நம் முன்னோர்கள் இதனை பல விதத்திலும் பயன்படுத்தி  வந்துள்ளனர். மருதாணியில் உள்ள மருத்துவ குணங்கள் என்னவென்று பார்ப்போம்:

மருதாணி அடிக்கடி  வைத்துக் கொண்டால் சொறி, சிரங்கு போன்ற தொற்றுகள்  ஏற்படுவதை  தடுக்கலாம். மருதாணி  நகத்தின் இடுக்கில் சேரும் அழுக்குகளின் மூலம் உருவாகும் விஷக் கிருமிகளை அழிக்கிறது. 

மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும். அதுபோன்று அடிக்கடி மருதாணி  வைத்து கொள்பவர்களுக்கு மனநோய் ஏற்படுவதில்லையாம்.  

மருதாணியை நாம் கால்களில் ஏற்படும் வெடிப்புகளில் பூசி வந்தால் பித்த வெடிப்பு விரைவில் மறையும்.

முடி உதிர்தல், இளநரை, வழுக்கை, முடி அடர்த்தியாக வளர போன்ற அனைத்திற்கும் மருதாணி நல்ல மருந்தாகும். அதுபோன்று மருதாணியை அரைத்து குளிக்கும் முன் தலையில் தேய்த்து மசாஜ் செய்து 1 மணி நேரம் ஊறவைத்து பின் குளித்தால் முடி தொடர்பான அனைத்து பிரச்னைகளும் தீர்ந்துவிடும். 

மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடிக்கும் என்ற  பயம் உள்ளவர்கள். மருதாணி இலைகளோடு சேர்த்து 7-8 நொச்சி இலைகளையும் சேர்த்து அரைத்து வைத்து கொண்டால்  சளித் தொந்தரவு இருக்காது. 

தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவும். மருதாணி இலைகளை அரைத்து  தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் எரிச்சல் வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம். 

முழு கட்டுரையைப் படிக்க →