மகளிர்மணி

உடல் அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் தயிர்!

நெ. இராமன்


இந்தியச் சமையலில் தயிர் பலவிதமாகப் பயன்படுகிறது. சோறு, பழம் எவற்றுடனும் தயிர் இன்றியமையாத ஒன்றாகும்.

தயிரிலுள்ள பாக்டீரியா சருமத்தை மிருதுவாக்கும். மேலும் குடல் அழற்சி, வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நோய்களுக்குக் காரணமான கிருமிகளை பாக்டீரியா அழிக்கிறது.

இரைப்பையில் எரிச்சல் ஏற்பட்டு வயிற்றுக்குள் எந்த உணவும் தங்க முடியாமல் போகும். அந்நிலையில் தயிரிலுள்ள லாக்டிக் அமிலம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். வாயுவின் உயர்வையும் குறைக்கும்.

அதிக அளவில் அம்மோனியா விடுவிக்கும்போது ஈரல் கெட்டுப் போய் கோமாவில் கொண்டு போய் விட்டுவிடும். இதற்கு, அன்றாட உணவில் தயிரைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால் அத்தகைய அபாயம் ஏற்படாது.

அழகு சாதனத்தில், உள் மருந்தாக மட்டுமல்ல, வெளி மருந்தாகவும் தயிர் பயன்படுகிறது. தயிரை உபயோகித்து தலைமுடியை சீர் செய்யலாம். முடி மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். பொடுகு நீங்கும். கடலை மாவுடன் தயிரைக் குழைத்துப் பூசி வர பருக்கள் மறையும். தயிர் கலந்த நீரால் முகம் கழுவி வர முகம் பொலிவடையும். கரும்புள்ளிகள் மறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT