மகளிர்மணி

ப்ரோக்கோலி  பாசிப்பருப்பு  கூட்டு 

வாணலியில் பாசிப்பருப்பை இட்டு, தேவையான அளவு நீர்விட்டு வேக வைத்துக் கொள்ளவும். தக்காளி, ப்ரோக்கோலி, வெங்காயம், மிளகாய் இவைகளை நறுக்கிக் கொள்ளவும்.

ராதிகா அழகப்பன்


தேவையானவை:

ப்ரோக்கோலி - 1
பாசிப்பருப்பு - 150 கிராம்
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 3
வெங்காயம் - 2
தேங்காய்த்துருவல் - அரை கிண்ணம்
சீரகம் - அரை கிண்ணம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
கடுகு, உளுந்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - தாளிக்க
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப


செய்முறை:

வாணலியில் பாசிப்பருப்பை இட்டு, தேவையான அளவு நீர்விட்டு வேக வைத்துக் கொள்ளவும். தக்காளி, ப்ரோக்கோலி, வெங்காயம், மிளகாய் இவைகளை நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், சீரகம், மிளகு சேர்த்து கரகரவென அரைத்து எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி நறுக்கிய ப்ரோக்கோலி, தக்காளி, வெங்காயம், மிளகாய் இவைகளைச் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், இத்துடன் அரைத்த மசாலா விழுது, வேக வைக்க பாசிப்பருப்பு இவைகளை இட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, போதிய அளவு நீர் ஊற்றி நன்கு கலந்து கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்திட்டு இறக்கவும். ப்ரோக்கோலி, பாசிப் பருப்பு கூட்டு தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT