மகளிர்மணி

கேரட் அப்பம்

எம்.சுகாரா ராமநாதபுரம்

தேவையானவை:

மைதாமாவு - ஒரு கிண்ணம்
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
வெல்லம் - கால் கிண்ணம்
கேரட் துருவல் - கால் கிண்ணம்
தேங்காய்த் துருவல் -  ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - கால்  தேக்கரண்டி
முந்திரி துண்டுகள் - ஒரு தேக்கரண்டி
நெய் -ஒரு தேக்கரண்டி
எண்ணெய் -  தேவையான அளவு

செய்முறை:

கேரட் துருவலை நெய் விட்டு லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்த பிறகு இறக்கி வடிகட்டவும். அதில் மைதா, அரிசிமாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகள், வதக்கிய கேரட் சேர்த்து, இட்லி மாவுப் பதத்துக்கு கரைத்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய்யில் போட்டு அப்பமாக சுட்டெடுக்கவும். இதை குழி பணியார சட்டியிலும் ஊற்றி செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT