தேவையானவை:
மைதாமாவு - ஒரு கிண்ணம்
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
வெல்லம் - கால் கிண்ணம்
கேரட் துருவல் - கால் கிண்ணம்
தேங்காய்த் துருவல் - ஒரு தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
முந்திரி துண்டுகள் - ஒரு தேக்கரண்டி
நெய் -ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கேரட் துருவலை நெய் விட்டு லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்த பிறகு இறக்கி வடிகட்டவும். அதில் மைதா, அரிசிமாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகள், வதக்கிய கேரட் சேர்த்து, இட்லி மாவுப் பதத்துக்கு கரைத்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். எண்ணெய்யில் போட்டு அப்பமாக சுட்டெடுக்கவும். இதை குழி பணியார சட்டியிலும் ஊற்றி செய்யலாம்.