பயறு பராத்தா
கோதுமை மாவு, மைதா மாவு, 1 மேசைக்கரண்டி எண்ணெய், உப்பு, சீரகம் சேர்த்து கலந்து மாவு சற்று தளர பிசைந்து 1மணி நேரம் வைக்கவும்.
தேவையானவை:
முளைக்கட்டிய பச்சை பயறு - 1 கிண்ணம்
கோதுமை மாவு - 1 கிண்ணம்
மைதா மாவு - 1 கிண்ணம்
எண்ணெய் - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
இஞ்சி மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
கொத்துமல்லி - சிறிது
பெருங்காயம் - சிறிது
சீரகம் - 2 தேக்கரண்டி
செய்முறை:
கோதுமை மாவு, மைதா மாவு, 1 மேசைக்கரண்டி எண்ணெய், உப்பு, சீரகம் சேர்த்து கலந்து மாவு சற்று தளர பிசைந்து 1மணி நேரம் வைக்கவும்.
முளைப்பயறை பச்சைமிளகாய் கொத்துமல்லி, பெருங்காயம் சேர்த்து அரைத்து ஆவியில் வேகவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். மாவு கலவையை சின்ன சின்ன உருண்டையாக செய்து நடுவே முளைப்பயறு கலவையை வைத்து மூடி லேசாக திரட்டி தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும். தக்காளி குருமாவுடன் சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும்.