குளிக்கும் முன் கவனிக்க வேண்டியவை...!
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைக் குளியலுக்குப் பயன்படுத்தலாம்.
எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழங்களை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைக் குளியலுக்குப் பயன்படுத்தலாம்.
ஒரு தேக்கரண்டி லாவண்டர் ஆயில் அல்லது ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டரை குளிக்கும் நீரில் கலந்து உபயோகிக்கலாம்.
கற்றாழையை உடல் முழுவதும் தேய்த்து, 10 முதல் 20 நிமிடங்கள் ஊறவைத்துக் குளிக்கலாம். இதனால் சருமம் பளபளக்கும். தோல் நோய்கள் வருவதும் தடுக்கப்படும்.
பாசிப்பருப்பை பொடி செய்து, மஞ்சளுடன் குழைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். இது சருமத்தின் மீதுள்ள கிருமிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகளை அழித்துவிடும். இவ்வாறு குளிக்கும்போது, சோப்பு பயன்படுத்தக் கூடாது.