வாழைப்பூ அடை
அரிசியையும் பருப்புகளையும் ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து. காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொர கொரப்பாக அரைக்கவும்.
தேவையானவை
நறுக்கிய வாழைப்பூ - 1 கிண்ணம்
புழுங்கல் அரிசி - 2 கிண்ணம்
துவரம் பருப்பு - 6 மேசைக்கரண்டி
உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு - தலா 3 மேசைக் கரண்டி
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
அரிசியையும் பருப்புகளையும் ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து. காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொர கொரப்பாக அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்து மாவில் சேர்க்கவும். கொத்துமல்லித் தழையையும் சேர்க்கவும். 3 மேசைக்கரண்டி எண்ணெய்யில் வாழைப்பூவை வதக்கி. அதையும் மாவுடன் சேர்க்கவும். தோசைக்கல்லில் இரண்டு கரண்டி மாவை ஊற்றி. ஓரங்களில் எண்ணெய் ஊற்றி, ஒருபுறம் வெந்ததும். திருப்பிப் போட்டு நறுக்கிய கொத்துமல்லித்தழையைத் தூவி, வேகவிட்டு எடுக்கவும்.