FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொட்டுக்கடலை : பயன்கள்

பொட்டுக் கடலையை மிக்ஸியில் பொடி செய்து வைத்துகொண்டால் பலவிதங்களில் கை கொடுக்கும்.

Dinamani
1 பிப்ரவரி 2024, 2:45 pm IST
பகிர்:

பொட்டுக் கடலையை மிக்ஸியில் பொடி செய்து வைத்துகொண்டால் பலவிதங்களில் கை கொடுக்கும்.

எல்லாவித முறுக்கு, நாடா பக்கோடா போன்றவற்றில் இந்தப் பொடி சேர்த்து வெண்ணெய் கலந்து செய்ய சுவை அதிகரிக்கும்.

இட்லி, மிளகாய் பொடி, பருப்புப் பொடி தயாரிக்கும்போது காரம் அதிகமாகிவிட்டால் இந்தப் பொடியை கொஞ்சம் கலந்தால் காரம் தெரியாது.

Advertisement

Advertisement

இந்தப் பொடியை இலேசாக வறுத்து சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து காய்ச்சிய நெய், வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்க ஈஸியான ஸ்நாக்ஸ் எளிதில் செய்யலாம்.

கூட்டு, சாம்பார் போன்றவை நீர்த்துப் போயிருந்தால் இந்தப் பொடியை நீரில் கரைத்து கொதிக்க வைத்தால், கெட்டியாகிவிடும்.

கட்லெட் செய்யும்போது ரஸ்க் பொடியுடன் பொட்டுக் கடலைப் பொடியை எண்ணெயில் பொரிக்க கூடுதல் க்ரிப்பாகவும், நீண்ட நேரத்துக்கு மொறு, மொறுவென்றும் இருக்கும்.

ரவா தோசை, கோதுமை தோசை ஆகியவற்றை கரைக்கும்போது, பொட்டுக்கடலைப் பொடியைக் கலந்து தோசை ஊற்ற நன்கு சிவந்து, இனிப்பாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments