மகளிர்மணி

பூண்டு பொடி 

வாணலியை சூடாக்கி உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு போட்டு மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

செளமியா சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

பூண்டு - 100 கிராம் 
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி
எள் - 1/4  தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 12
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
புளி - சிறிதளவு
நாட்டு சர்க்கரை - 1 தேக்கரண்டி

செய்முறை: 

வாணலியை சூடாக்கி உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு போட்டு மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுக்கவும்.  பிறகு எள், பொட்டுக்கடலை, தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். மிளகாய் வற்றல், கறிவேப்பிலை,  சேர்த்து மொறு மொறுப்பாக வரும் வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.பிறகு நல்லெண்ணெய் சேர்த்து பூண்டு லேசாக நசுக்கி சேர்த்து பொன்னிறமாக மொறு மொறுவென வரும் வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும். பூண்டு நன்றாக வதக்கி கொள்ளவும். 

வறுத்த பூண்டு ஆறியபின்  மிக்ஸியில் போட்டு உப்பு, பெருங்காயத்தூள், புளி, நாட்டு சக்கரை சேர்த்து அரைத்து எடுக்கவும். ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும். பூண்டு பொடி தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT