தேவையான அளவு
பயத்தம் பருப்பு- 1 கிண்ணம்
துருவிய வெல்லம்- 1 கிண்ணம்
ஏலப் பொடி- 1 தேக்கரண்டி
பால்- 1 கிண்ணம்
செய்முறை:
பயத்தம் பருப்பை வாணலியில் வறுத்துநீர்விட்டு குழைய வேகவிடவும். வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து, ஏலப்பொடி சேர்த்து இறக்கி, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு இறக்கவும். ஏகாதசியன்று விரதம் இருப்பதால் இந்தக் கஞ்சியை அருந்தினால் தெம்பு கிடைக்கும்.