துள்ளுமாவு
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிகட்டி, துணியில் உலர்த்தவும்.
தேவையானவை:
பச்சரிசி ஒரு கிண்ணம்
துருவிய வெல்லம் அரை கிண்ணம்
ஏலக்காய்த் தூள் ஒரு தேக்கரண்டி
செய்முறை:
Advertisement
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீரை வடிகட்டி, துணியில் உலர்த்தவும். ஓரளவு உலர்ந்ததும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் ஏலக்காய்த் தூள், வெல்லம் சேர்த்து கலக்கவும். கைகளால் பிடித்தால் துள்ளி எழும்பும். அதனால்தான் இதன் பெயர் துள்ளுமாவு.