முகப்பு
மகளிர்மணி

சமையல் குறிப்புகள்...

பூண்டை வாங்கியதும் பல், பல்லாக உதிர்த்து காற்றாட விடுவது நல்லது. ஈரம் உலர்ந்தால் அழுகாது. கருக்காமலும் இருக்கும்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

பூண்டை வாங்கியதும் பல், பல்லாக உதிர்த்து காற்றாட விடுவது நல்லது. ஈரம் உலர்ந்தால் அழுகாது. கருக்காமலும் இருக்கும்.

கொத்துமல்லி இலை நீண்ட நாள்கள் புதியதாக இருக்கும்படி வைக்க, அவற்றை வாழை இலையில் வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் போதும்.

கிண்ணத்தில் படிந்துள்ள காபி, டீ கறைகளை நீக்க உப்புத் தூளைத் தேய்த்து கழுவினால் போதும்.

உருளை, சேனைக் கிழங்குகளை ரோஸ்ட் கறி செய்யும்போது, கடைசியில் ரஸ்க் தூளைக் கொஞ்சம் தூவி ஒரு புரட்டினால் போதும். கறி நன்கு சுவை மிகுந்திருக்கும்.

 ரவா உப்புமா மீதமாகிவிட்டால், அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →