முகப்பு
மகளிர்மணி

ரவை பொங்கல்

மிளகு,  சீரகத்தை பொடித்துக் கொள்ள வும். கடாயில் நெய் விட்டு, பொடித்த மிளகு , சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
பகிர்:

தேவையானவை: 

வறுத்த ரவை-  கால் கிலோ
மிளகு - 10
சீரகம்-  ஒரு  தேக்கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்)
வறுத்த முந்திரிப் பருப்பு - 10
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை-  சிறிதளவு
நெய் - 100 மில்லி
உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

மிளகு,  சீரகத்தை பொடித்துக் கொள்ள வும். கடாயில் நெய் விட்டு, பொடித்த மிளகு , சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதில், ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாக கொதிக்கும்போது ரவையை போட்டு கிளறி, இறக்கி முந்திரிப் பருப்பு சேர்க்கவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.