அறுசுவையின் மருத்துவக் குணங்கள்
உணவில் அறுசுவைகள் உண்டு. ஒவ்வொரு சுவைக்கும் என்னென்ன மகத்துவமும், மருத்துவக் குணங்களும் உண்டு.
உணவில் அறுசுவைகள் உண்டு. ஒவ்வொரு சுவைக்கும் என்னென்ன மகத்துவமும், மருத்துவக் குணங்களும் உண்டு.
காரம்: உடல் உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளைத் தூண்டும். மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் போன்றவற்றில் அதிகக் காரச் சுவை உள்ளது.
கசப்பு: பாகற்காய், வெந்தயம், வேப்பம்பூவில் மிகுதியாக இருக்கிறது. தேவையற்ற கிருமிகளை அழித்து, உடலுக்குச் சக்தியைக் கூட்டும். சளியைக் கட்டுப்படுத்தும்.
இனிப்பு: தசையை வளர்க்கும்.
புளிப்பு: ரத்தக் குழாயில் கழிவை நீக்கும். எலுமிச்சை, புளிச்ச கீரை, தக்காளி, புளி, மாங்காய், அவரை, அத்திக்காய் ஆகியவற்றில் அடங்கியுள்ளன.
துவர்ப்பு: ரத்தம் வெளியேறாது தடுக்கும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காயில் அடங்கியுள்ளது.
உப்பு: ஞாபகச் சக்தியைக் கூட்டும். அளவு கூடினால் கெடுதலை ஏற்படுத்தும். கீரைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.