தூதுவளையின் மகத்துவம்...
தூதுவளை சூடு என்பதால் கீரையாகப் பயன்படுத்தாமல், மூலிகையாகவே பயன்படுத்துவர். இதைக் கஷாயமாகச் செய்து குடிக்கலாம். கசப்பான சுவையைத் தரும் என்பதால், மற்ற கீரையைப் போன்று இதைச் சாப்பிட முடியாது.
வைட்டமின் சி, இரும்பு உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரலைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. தொண்டையில் அடிக்கடி ஏற்படும் நோய்த் தொற்று குணமாகும். நரம்புகளையும் வலுப்படுத்தும்.