முகப்பு
மகளிர்மணி

வீட்டுக்குறிப்புகள்...

ரவா உப்புமா மீதமாகிவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவு கலந்து வடை செய்யலாம்.

Updated On : 10 நவம்பர், 2024 at 8:27 AM
முருங்கைக் கீரை
பகிர்:

ரவா உப்புமா மீதமாகிவிட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவு கலந்து வடை செய்யலாம்.

குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மீது நுனியில் ரப்பர் பேண்டை சுற்றி பூ வைத்தால், கீழே விழாது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பாட்டில் முருங்கைக் கீரை சேர்த்துவந்தால் பால் அதிகம் சுரக்கும்.

துளசி இலை, வேப்பிலை இரண்டையும் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வர முகப் பரு மறையும்.

பிரண்டை துவையல் சாப்பிட அஜீரணம் நீங்கும்; பசி எடுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.