தேங்காய் அல்வா
பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்தவுடன் தேங்காய்த் துருவலையும், அரிசியையும் வெண்ணெய் போல் அரைக்க வேண்டும்.
தேவையான பொருள்கள்:
தேங்காய்- 1
பச்சரிசி, நெய்- தலா 50 கிராம்
முந்திரி பருப்பு- 10
வெல்லம்- 250 கிராம்
செய்முறை:
பச்சரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைத்தவுடன் தேங்காய்த் துருவலையும், அரிசியையும் வெண்ணெய் போல் அரைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த விழுதைப் போட்டு வெல்லத்தூளையும் போட்டு ஏலக்காய்ப் பொடி சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். சுருள வரும்போது நெய்யைவிட்டு வறுத்த முந்திரியை அதில் போட்டு கீழே இறக்க வேண்டும்.