விமலா சடையப்பன்
குழம்பில் கசகசாவைக் கலந்தால் தூக்கம் நன்றாக வரும்.
தக்காளிசூப்பில் பிரட் துண்டு அல்லது ஜவ்வரிசி வடாமை பொரித்து போட்டு சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும்.
ஏப்பம் அடிக்கடி வந்தால், அரை தேக்கரண்டி ஓமத்தை வாயில் போட்டு மென்றால் உடனடியாகத் தீர்வு உண்டு.
நெஞ்சு எரிச்சலுக்கு கேரட் சாறு பருகினால், நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு கிண்ணம் நீரில் கடுகு போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால், அதிலுள்ள வாடை போய்விடும்.
வீட்டுச் சுவரில் மயில் இறகை வைத்தால், பல்லிகள் நடமாட்டம் இருக்காது.
துவையல் அரைக்கும்போது இரண்டு எலுமிச்சை இலைகளைச் சேர்த்து அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்.
குருமாவில் தேங்காய்க்குப் பதில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை கரகரப்பாக அரைத்துச் சேர்க்கலாம். நல்ல சுவையாக இருக்கும்.
-விமலா சடையப்பன், காளனம்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.