மகளிர்மணி

ஸ்பெஷல் பராத்தா

வெந்தயக் கீரையை காம்புகள் நீக்கிக் கழுவிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

ஆர். ஜெயலட்சுமி

தேவையான பொருள்கள்:

வெந்தயக் கீரை- 1 கட்டு

கம்பு மாவு- 200 கிராம்

கோதுமை மாவு- 100 கிராம்

பெருங்காயம்- 1 சிட்டிகை

கடலை மாவு- 1 மேசைக்கரண்டி

தயிர்- 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய்- 8

மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி

இஞ்சி- 1 துண்டு

பூண்டு- 5 பற்கள்

உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

வெந்தயக் கீரையை காம்புகள் நீக்கிக் கழுவிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து ஒன்றாகக் கலந்துகொண்டு, எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்துகொள்ள வேண்டும்.

வெந்தயக் கீரையை இறுதியில் சேர்த்து கலக்க வேண்டும். கலவை சப்பாத்தி மாவுப் பதத்துக்கு இருக்க வேண்டும். சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போல் இட்டு தோசைக்கல்லில் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக நிர்வாகிகள் 4 பேர் நீக்கம்

மறைந்த மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடலுக்கு ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்கு!

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

SCROLL FOR NEXT