முள்ளங்கி கோளா
இரு பருப்புகளையும் தனித்தனிப் பாத்திரங்களில் போட்டு தாராளமாக நீர் விட்டு ஊற வையுங்கள்.
தேவையான பொருள்கள்:
முள்ளங்கி- 300 கிராம்
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு- தலா 60 கிராம்
Advertisement
Advertisement
வெங்காயம்- 5
எண்ணெய்- 300 மில்லி
மிளகாய்த் தூள்- 3 தேக்கரண்டி
கரி மசாலா தூள்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
இரு பருப்புகளையும் தனித்தனிப் பாத்திரங்களில் போட்டு தாராளமாக நீர் விட்டு ஊற வையுங்கள். நன்றாக ஊறியதும் அவற்றை எடுத்து கரகரப்பார அரைக்கவும். முள்ளங்கியை தோள் சீவி தேங்காயைத் துருவுவதுபோல், துருவுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்திருக்கும் இரு பருப்புகளையும், முள்ளங்கி துருவல், வெங்காயம், உப்பு, மிளகாயத் தூள், கரிமசாலா தூள் ஆகியவற்றைப் போட்டு, நன்றாகப் பிசைந்துகொள்ள வேண்டும். பிறகு அதை எலுமிச்சைக் காய் அளவு உருண்டைகளாக உருட்ட வேண்டும். அடுப்பில் இரும்புச் சட்டியை வைத்து, எண்ணெயை ஊற்றுங்கள். அது நன்றாகக் காய்ந்ததும் முள்ளங்கி சோளா உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வேகவைக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.