மகளிர்மணி

மொச்சை பட்டாணி சுண்டல்

மொச்சையை முதல் நாள் இரவு போட்டு மறுநாள் குக்கரில் பச்சை பட்டாணியுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும்.

மகாலட்சுமி சுப்ரமணியன்

தேவையான பொருள்கள்:

மொச்சை - 2 கிண்ணம்

ப.பட்டாணி - கால் கிண்ணம்

வறுத்து அரைத்த சாம்பார் பொடி -1 தேக்கரண்டி

தாளிக்க: கடுகு, உ.பருப்பு, பெருங்காய பொடி

தேங்காய் - தேவையான அளவு

பச்சை மிளகாய், சோம்பு கொரகொரப்பாக அரைத்தது - 1 தேக்கரண்டி

சின்ன மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி.

செய்முறை :

மொச்சையை முதல் நாள் இரவு போட்டு மறுநாள் குக்கரில் பச்சை பட்டாணியுடன் உப்பு சேர்த்து நன்றாக வேக விடவும். வெந்ததும் இறக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உ.பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து அது பொரிந்ததும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போடவும். இதனுடன் வெந்த மொச்சை, பட்டாணியை சேர்த்து வறுத்தரைத்த சாம்பார் பொடி, தேங்காய் கொரகொரப்பாக அரைத்ததைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவுக்கு பாதிப்பு: அமைச்சா் எஸ்.ரகுபதி விமா்சனம்

1,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

திருப்பத்தூரில் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விமான சேவை குளறுபடி விவகாரம்: இண்டிகோவுக்கு எதிராக சிசிஐ விரிவான விசாரணைக்கு உத்தரவு

அரசு-மக்கள் இணைவது எப்படி?

SCROLL FOR NEXT