பிள்ளை வளர்த்தி 'வசம்பு'
'பிள்ளை வளர்த்தி' என்று அழைக்கப்படும் வசம்பு பற்றி...
நன்மை ஏராளம் கொண்ட வசம்புக்கு 'பிள்ளை வளர்த்தி' என்ற பெயருண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம் பெற்று, மூளை சிறப்பாகச் செயல்பட உதவுகிறது.
உணவாலோ அல்லது அலர்ஜியாலோ விஷத்தன்மை ஏற்படக்கூடாது என்பதற்காக பிறந்த குழந்தைக்கு வசம்பை உரசி வாயில் வைப்பர். வசம்பைத் தூள் செய்து, அதில் 2 தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து அருந்தினால், தொற்றுநோய்கள் நீங்கிவிடும். எப்படிப்பட்ட விஷத்தன்மையும் நீங்கிவிடும்.
அரை தேக்கரண்டி வசம்புப் பொடியுடன் சிறிது கடுக்காய்ப் பொடி, மிளகுப் பொடி, திப்பிலி, பனங்கற்கண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும். அதில் தண்ணீர் ஊற்றில் கொதிக்கவைத்து, வடிகட்டி குடித்தால் நெஞ்சகக் கோளாறு, சளி, இருமல், செரிமானம் நீங்கி சரியாகும். வயிற்று உப்புசத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள காற்றை வெளியே தள்ளும். வயிற்று வலி, அல்சரைப் போக்கும்.
Advertisement
Advertisement
- மகாலெக்ஷ்மி சுப்பிரமணியன்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.