முகப்பு
சிறுவர்மணி

சிறுவர் பாடல்: அன்னை தெரசா!

அன்பே வடிவாய்த் திகழ்ந்தவராம் அன்னை தெரஸô பெண்மணியாம் கருணைப் பொங்கிட வறியோர்க்குக் கனிவாய் சேவை செய்தவராம்! ஏழைக் குழந்தைகள் அறிவுபெற கருத்தாய் கல்வி அளித்தவராம் ஆதரவில்லா முதியோர்க்கு அடைக்கலம் தந்த

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:23 PM
பகிர்:

அன்பே வடிவாய்த் திகழ்ந்தவராம்

அன்னை தெரஸô பெண்மணியாம்

கருணைப் பொங்கிட வறியோர்க்குக்

கனிவாய் சேவை செய்தவராம்!

ஏழைக் குழந்தைகள் அறிவுபெற

கருத்தாய் கல்வி அளித்தவராம்

ஆதரவில்லா முதியோர்க்கு

அடைக்கலம் தந்தே காத்தவராம்!

தொழுநோய் கண்டு தவிர்த்தோர்க்கு

தொண்டுகள் பலப்பல புரிந்தவராம்

உறவினர் கைவிட துயருற்றோர்-என்

குழந்தைகள் என்றே உரைத்தவராம்!

சாதியும் மதமும் கடந்திங்கே

உயிர்களை உறவாய் மதித்தவராம்

உலகோர் நலமுற உதவுவதே

இறைவழி பாடென்று சொன்னவராம்!

அன்பே தெய்வத்தின் வடிவமென்று

ஆராய்ந்தால் நாம் உணருவோம்-அன்பு

உருவமாம் அன்னை தெரஸôவை

தெய்வத்தின் நிகராய்ப் போற்றுவோம்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.