முத்துக் கதை: எங்கே நிம்மதி?
ஓரு மன்னன் அண்டை நாடுகளையெல்லாம் வென்று தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர முடிவு செய்தான். படையெடுத்துச் செல்வதற்கு முன்னர் தனது குருவிடம் ஆசி பெறச் சென்றான். அவனிடம் குரு, "முதலில் எந்த நாட்டுக்குச் செல்
ஓரு மன்னன் அண்டை நாடுகளையெல்லாம் வென்று தனது ஆட்சியின் கீழ் கொண்டு வர முடிவு செய்தான். படையெடுத்துச் செல்வதற்கு முன்னர் தனது குருவிடம் ஆசி பெறச் சென்றான்.
அவனிடம் குரு, "முதலில் எந்த நாட்டுக்குச் செல்லப் போகிறாய்?' என்று கேட்டார்.
"கலிங்க நாட்டுக்கு...'
"அடுத்து..?'
"மாளவம், அங்கம், வங்கம்...' என்று வரிசையாகச் சில நாடுகளின் பெயர்களைக் கூறினான்.
குரு புன்னகை செய்தபடி, "இத்தனை நாடுகளையும் வென்றபிறகு என்ன செய்யப் போகிறாய்?' என்று வினவினார்.
"அதன்பிறகு நிம்மதியாக எனது நாட்டில் இருப்பேன்..!' என்றான் மன்னன்.
"அப்படியானால் நீ, ஏன் இவ்வளவு நாடுகளுக்கும் படையெடுத்துச் சென்று சிரமப்பட வேண்டும்? இப்போது நீ இருக்கும் நிலையிலேயே உனது நாட்டில் நிம்மதியாக இருக்கலாமே? நிம்மதிதானே உனக்கு வேண்டும்! அதை இப்போதே செய்து விடேன்' என்றார் குரு.
மன்னன் பதிலேதும் சொல்லாமல், போருக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டுத் திரும்பினான்.