குழந்தைப் பாடல்: கை விசிறி!
பனையோலை நறுக்கியே பக்குவமாய் வடிவமைக்க விசிறியாக யாவர்க்கும் எப்போதும் பயன்படுவேன்! அரைவட்ட வடிவோடு கையில்வந்த நிலாப்போல கோடைக்கு இதமான இளங்காற்றும் நான்தருவேன்! பெருஞ்செலவோ எனக்கில்லை இ
பனையோலை நறுக்கியே
பக்குவமாய் வடிவமைக்க
விசிறியாக யாவர்க்கும்
எப்போதும் பயன்படுவேன்!
அரைவட்ட வடிவோடு
கையில்வந்த நிலாப்போல
கோடைக்கு இதமான
இளங்காற்றும் நான்தருவேன்!
பெருஞ்செலவோ எனக்கில்லை
இடம்பெரிதாய்த் தேவையில்லை
எங்குமெனைக் கொண்டுசென்றால்
மென்காற்று நான்கொடுப்பேன்!
செல்வந்தர் என்றாலும்
ஏழைமனிதர் என்றாலும்
மின்சாரம் தடைபட்டால்
நான்தானே கைகொடுப்பேன்!