குறள் பாட்டு
காட்டில் ஓடும் முயலின்மேல்குறிவைத்து அம்பு எய்வது
Updated On : 3 ஜனவரி, 2024 at 6:34 PM
படைச்செருக்கு
கானமுயல் எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
-திருக்குறள்
காட்டில் ஓடும் முயலின்மேல்
குறிவைத்து அம்பு எய்வது
பெரிய செயல் ஆகாது
சிறிய செயல் ஆகுமே!
யானை மேல் வேல் எய்து
யானை தப்பினாலும்
பெரிய செயல் ஆகுமே
அதுபோல பெருமை செய்திடு!