1. உண்மைக்குப் பகை, உள்ளத்தில் தோன்றும் பயம்! - ராஜாஜி
2. கஷ்டமாக இருப்பதால் எதையும் சாத்தியமானதல்ல என்று எண்ணிவிடக் கூடாது! - மகாத்மா காந்தி
3. சரியாக நன்றி சொல்லக் கற்றுக் கொள்; வாழ்வின் பேரின்பம் அதுவே! - தக்கரே
4. சொல்லக்கூடாத பேச்சானால் அதைச் சொல்லாமல் இருப்பதே மேல்! - மகாவீரர்
5. நற்பண்பு இல்லாதவர்கள் உப்பில்லாத பண்டங்களுக்குச் சமமானவர்கள்! - சாய்பாபா
6. நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்! - வள்ளலார்
7. உழைப்பில் பலர் பங்கெடுத்துக் கொண்டால் வேலை எளிதாகி விடும்! - ஹோமர்
8. வாழ்க்கை ஒரு மலர்; அதில் ஊறும் தேன் அன்பு!
- விக்டர் ஹியூகோ
9. யாருக்கும் உதவி செய்யாதவர்கள், பிறர் உதவியை எதிர்பார்க்க முடியாது! - ஈசாப்
10. பிறர் குற்றம் காண்பதும், தன் குற்றம் மறப்பதுமே மடைமையின் முழு அடையாளம்! - ஸிஸரோ
தொகுப்பு: ஏ.சக்தி, ஏ.கவிப்ரியா, ஏ.முத்து, வேலூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.