பொன்மொழிகள் - புத்தகம்
அலைந்தேன், திரிந்தேன், எங்கெங்கோ தேடினேன். அமைதி கிடைக்கவில்லை. கடைசியில் கிடைத்தது என் வீட்டில் ஒரு புத்தகத்தில்..!
1. அலைந்தேன், திரிந்தேன், எங்கெங்கோ தேடினேன். அமைதி கிடைக்கவில்லை. கடைசியில் கிடைத்தது என் வீட்டில் ஒரு புத்தகத்தில்..!
- தாமஸ்
2. இந்த மாபெரும் உலகத்தின் மகத்தான அதிசயங்கள் இரண்டுதான். ஒன்று புத்தகம், மற்றொன்று உயிருள்ள மனிதன். - கிங்ஸ்லா
3. உலகத்தின் செல்வங்கள் அனைத்தையும் தந்தாலும் புத்தகங்களைப் படிப்பதில் எனக்குள்ள ஆர்வத்தை மட்டும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். விட்டுக் கொடுப்பது முறையல்ல! - கிப்சன்
4. நம்மைத் தட்டியெழுப்பி, அறிவு புகட்டி, மகிழ்ச்சியைக் கொடுத்து, வசதிகளை அளித்து, அச்சத்தையும் ஊட்டி, தங்கள் இதயத்தைத் திறந்து காட்டி, நம்முடைய இதயங்களோடு இன்ப உரை நிகழ்த்துவன புத்தகங்களே! - கிங்ஸ்லி
5. ஒரு ஆடம்பரத்தை மட்டும் என்னால் விட முடியாது; அதுதான் புத்தகங்கள் வாங்கும் பழக்கம்.
- நேரு
6. ஒரு நல்ல புத்தகத்தைப் போல சிறந்த நண்பனும் உறவினனும் இவ்வுலகிலேயே எனக்கில்லை.
- கவிட்யூபர்
7. பல திறமை வாய்ந்த நண்பர்களின் தொடர்பைவிட பொறுக்கியெடுத்த சில புத்தகங்களின் உறவே அதிக நன்மை அளிக்கும். - கால்டன்
8. ஓர் உயரிய புத்தகமானது எத்தனையோ பேர்களின் வாழ்க்கையில் புரட்சியை உண்டு பண்ணுகிறது. உலகில் சாகாவரம் பெற்றவைகள் புத்தகங்களே! - சோயத்
தொகுப்பு: ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.