குறள் பாட்டு
நன்மை தீமை இரண்டுமே நாவின் சொல்லால் வந்திடும்
Updated On : 3 ஜனவரி, 2024 at 7:02 PM
சொல்வன்மை
(பொருட்பால் - அதிகாரம் 65 - பாடல் 2)
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு
-திருக்குறள்
நன்மை தீமை இரண்டுமே
நாவின் சொல்லால் வந்திடும்
சொல்லில் சோர்வு இல்லாமல்
காத்துக் கொள்ள வேண்டுமே
வாயில் வந்ததைப் பேசினால்
வருந்தும் நிலை நேருமே
நல்ல வற்றைப் பேசவே
நாளும் எண்ண வேண்டுமே