குறள் பாட்டு
இடையூறு ஏதும் நேராமல்எச்சரிக்கை கொண்டு இரு
Updated On : 3 ஜனவரி, 2024 at 7:15 PM
வினைத்திட்பம்
(பொருட்பால் - அதிகாரம் 67 - பாடல் 2)
ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்
-திருக்குறள்
இடையூறு ஏதும் நேராமல்
எச்சரிக்கை கொண்டு இரு
அதையும் மீறி இடையூறு
வந்தால் தளரக் கூடாது
வருமுன் சிந்தித்துச் செயல்படு
துன்பம் வந்தால் சகித்துக்கொள்
இவ்விரண்டும் வாழ்விலே
ஏற்றுக் கொள்ளும் வழிகளே.