குறள் பாட்டு
சூதாடி ஒன்றை அடைந்தவர்அதைப்போல் மேலும் அடைந்திட
Updated On : 5 ஜனவரி, 2024 at 9:43 AM
சூது
ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு.
-திருக்குறள்
சூதாடி ஒன்றை அடைந்தவர்
அதைப்போல் மேலும் அடைந்திட
ஆசைகொண்டு அணுகுவார்
இழந்து இழந்து வருந்துவார்
ஒன்றைப் பெற்று நூறிழக்கும்
சூதினைக் கருதி வாழ்வோர்க்கு
நன்மை பெற்று வாழ்ந்திடும்
நல்ல வழி தோன்றாது.