விவேகானந்தரின் பொன்மொழிகள்
விடாமுயற்சியால் வாழ்க்கையில் வெற்றி கிட்டும்.
* எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக்
கொடுப்பதே தியானம்.
* சுயநலம் கொண்டதே தீய ஒழுக்கம்.
* விடாமுயற்சியால் வாழ்க்கையில் வெற்றி
கிட்டும்.
* நாம் வாழ விரும்பினால் மரணத்தைப்பற்றிக்
கவலைப் படக்கூடாது.
* கல்வி, கல்வி, கல்வி அது ஒன்றே இப்போது
நமக்குத் தேவை.
* சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும்.
* சிங்கத்தின் வீரத்துடன் அதே சமயம் மலரின் மென்மையுடன் வேலை செய்.
* நன்மை செய்வது வாழ்வு, பிறருக்கு தீமை
செய்வது சாவு.
* ஆசை இருக்கும் வரை உண்மையான இன்பம் வராது.
* அறிவு பெறுவதன் முழு ரகசியமும் மன
ஒருமைப்பாட்டில்தான் உள்ளது.
* இதயமே வெல்லும். மூளை அல்ல.
* சத்தியமே என் தெய்வம். பிரபஞ்சமே எனது நாடு.
தொகுப்பு:
-எல்.நஞ்சன், எடக்காடு, -ஜி.பத்மினி, மதுரை.