முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

ஜபம், பிரார்த்தனை புலனடக்கத்திற்குரிய சாதனங்கள்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:32 AM
பகிர்:

ஜபம், பிரார்த்தனை புலனடக்கத்திற்குரிய சாதனங்கள்.

-ஆதிசங்கரர்

ஏற்பதைவிட ஈவதே மேலானது.

-இயேசுபிரான்

விரயம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை.

-குர்ஆன்

சோம்பலினால் உடல் வலிமை மன வலிமை இரண்டும் போய்விடும்.

-அன்னை சாரதாதேவி

முட்டாளின் தோழமை அழிவுப்பாதையில் அழைத்துச் செல்லும்.

-புத்தர்

சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்.

-அவ்வையார்

வாய்மை சந்திரனைவிட தூய்மையானது.

சூரியனைக் காட்டிலும் பிரகாசமானது.

-மகாவீரர்

தன்னைத்தானே வெல்பவனே மிகச்சிறந்த வீரன்.

-புத்தர்

வீடு அழுக்கின்றி இருப்பதைவிட

மனம் அழுக்கின்றி இருப்பதே மேல்.

-காஞ்சிப் பெரியவர்

வாய்ப்புகள் கதவைத் தட்டும்போது தயாராக இருப்பவனே புத்திசாலி.

-சாணக்யன்

அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும்வரை

உங்களுக்கு என்றுமே விடிவுகாலம்தான்.

-பிளாட்டோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.