முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

*  நீ செய்யும் காரியத்திற்கு நீயே பொறுப்பாளியாக இருக்க வேண்டும். நீ செய்வதற்குப் பிறர் தண்டனை அடையும்படி ஏற்படக் கூடாது.

பகிர்:

*  நீ செய்யும் காரியத்திற்கு நீயே பொறுப்பாளியாக இருக்க வேண்டும். நீ செய்வதற்குப் பிறர் தண்டனை அடையும்படி ஏற்படக் கூடாது.

-மாக்சிம் கார்க்கி

*  நல்ல செயல்கள் நம்மை உயர்த்துகின்றன. நாம் நம் செயல்களின் புதல்வர்களாக இருக்கிறோம்.

-செர்வாண்டிஸ்

*  நேரத்தை நாம் இதயத் துடிப்புகளைக் கொண்டு கணக்கிட வேண்டும். எவன் மிக அதிகமான சிந்தனை செய்கிறானோ அவனே அதிகமாக வாழ்பவன் ஆவான்.

-பெய்லி

*  தூய சொல்லும் நேர்மையும் ஒருவனை எந்த நாடு வழியாகவும் வெற்றி மாளிகைக்கு அழைத்துச் செல்லும்.

-மில்டன்

*  கீழ்நோக்கிப் பார்க்கும் ஒருவன் நாத்திகம் பேசலாம். மேல்நோக்கிப் பார்க்கும் எவனும் கடவுள் இல்லை என்று சொல்லவே மாட்டான்.

-ஆப்ரஹாம் லிங்கன்

*  தன் சக்தியிலிருந்து முடிந்த அளவு சாறு பிழிவதே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை லட்சியமாய் இருக்க வேண்டும்

-நிக்டர்

*  குளம் நிரம்ப நீர் இருந்தாலும் நம் குடத்தின் அளவுதான் நாம் கொள்ள முடியும். நம் எண்ணத்தின் பிரதிபலிப்புதான் பலன்.

-டிஸ்ரேலி

*  நன்மை ஒரு நல்ல வைத்தியன்தான். ஆனால் தீமை சில சமயங்களில் அதைவிட மிக நல்ல வைத்தியன்.

-எமர்சன்

*  விலையுயர்ந்த வேலைப்பாடுள்ள உடையணிந்து நரகம் செல்வதைக் காட்டிலும் கந்தைத் துணியுடுத்தி சுவர்க்கம் செல்வது மேல்.

-தாமஸ் புல்லர்

*  மனிதன் தன்னிடத்தில் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை உணர்ந்து செயலில் ஈடுபடும்பொழுது அவனால் சாதிக்க முடியாத செயல் எதுவுமே இருக்க முடியாது.

-கதே

*  கடவுள் மாயாஜால வித்தைக்காரர் அல்லர். நினைத்தபடியெல்லாம் வகை வகையான உருவங்களில் அவதாரங்கள் எடுக்க மாட்டார். அவர் என்றென்றும் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார்.

-பிளேட்டோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.