முகப்பு
சிறுவர்மணி

முத்துக் கதை: வழி காட்டுதல்

ஓர் ஊருக்குச் செல்கிறபோது ஒரு முதியவரும் ஓர் இளைஞனும் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவனிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி, ""அங்கு செல்ல வேண்டும்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

ஓர் ஊருக்குச் செல்கிறபோது ஒரு முதியவரும் ஓர் இளைஞனும் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவனிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி, ""அங்கு செல்ல வேண்டும்

எவ்வளவு நேரம் ஆகும்? என்று கேட்டார்கள். அதற்கு அந்த ஊரைச் சேர்ந்தவன், ""மெதுவாகப் போனால் விரைவில் அடைந்து விடலாம். விரைவாகப் போனால் நீண்ட நேரம் ஆகும்'' என்று பதில் சொன்னான். இப்பதில் முதியவருக்கு வியப்பைத் தந்தது.

 அந்த ஊரை அடைய முதியவர் வேகமாக நடக்க முற்பட்டார். அந்தப் பாதை மேட்டுப்பாங்கான, கரடு முரடான சரளைக் கற்கள் நிறைந்த பாதையாகவும் இருந்தது. எனவே அதில் அவர் அடிக்கடி சறுக்கி விழ நேர்ந்தது. அடிக்கடி விழுந்த காரணத்தினால் உடலில் சிராய்ப்புடன் ரத்தக் காயங்கள் ஏற்பட்டது. மேலும் முதியவருக்கு மிகவும் களைப்பு ஏற்பட்டது. தான் செல்ல விரும்பிய இடத்தை அடைவதற்கு அவர் வெகு நேரம் எடுத்துக் கொள்ளும்படி ஆனது.

 ஆனால் இளைஞன் மட்டும் மெதுவாக தனது இலக்கை நோக்கி நடக்க ஆரம்பித்தான். பாதையை கவனமுடன் கவனித்துக் கடந்ததால் எங்கும் அவன் சறுக்கவில்லை. விழவுமில்லை. நிதானமாகச் சென்றதனால் உரிய நேரத்தில் இளைஞன் இலக்கை அடைந்தான்.

 எத்தகைய பாறையாக இருந்தாலும் வேகமாகக் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை முதியவருக்கு!

 எத்தகைய பாறையாக இருந்தாலும் நிதானமாகக் கடந்து விடலாம் என்ற நம்பிக்கை இளைஞனுக்கு!

 வழிகாட்டியின் சொல்லை மதிக்காமல் சென்றதால் தோல்வியுற்றார் முதியவர்!

 வழிகாட்டியின் சொல்லை மதித்ததால் இலக்கை எளிதில் அடைந்தான் இளைஞன்!   

முழு கட்டுரையைப் படிக்க →